திருப்பூரில் மின்மாற்றியில் சிக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழப்பு..!! இரைத்தேடி வந்தபோது பரிதாபம்.!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: இறைத்தேடி வந்த தேசிய பறவையான மயில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த மயிலின் உடலை அடக்கம் செய்வதற்காக வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.

தேசிய பறவையான மயில் நாள்தோறும் இரைத் தேடி திருப்பூர் நகர் பகுதியில் வலம் வருவது வழக்கம்.



இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இறைத்தேடி வந்த மயில் ஒன்று மின்மாற்றியில் அமர்ந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.



இதனைப்பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த நிலையில் மயிலை மீட்டனர்.

உயிரிழந்த இந்த ஆண் மயிலுக்கு ஒன்றரை வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அடக்கம் செய்வதற்காக மயிலின் உடலை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...