திருப்பூரில் மின்மாற்றியில் சிக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழப்பு..!! இரைத்தேடி வந்தபோது பரிதாபம்.!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி ஒன்றரை வயது ஆண் மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: இறைத்தேடி வந்த தேசிய பறவையான மயில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த மயிலின் உடலை அடக்கம் செய்வதற்காக வனத்துறையினர் எடுத்துச்சென்றனர்.

தேசிய பறவையான மயில் நாள்தோறும் இரைத் தேடி திருப்பூர் நகர் பகுதியில் வலம் வருவது வழக்கம்.



இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இறைத்தேடி வந்த மயில் ஒன்று மின்மாற்றியில் அமர்ந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.



இதனைப்பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த நிலையில் மயிலை மீட்டனர்.

உயிரிழந்த இந்த ஆண் மயிலுக்கு ஒன்றரை வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து அடக்கம் செய்வதற்காக மயிலின் உடலை வனத்துறையினர் எடுத்துச்சென்றனர். மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...