தேங்காய் விலை வீழ்ச்சி..! - கோவையில் விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்..!

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுல்தான்பேட்டையில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து மாட்டு வண்டியுடன் வந்து விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: உடல் நலத்துக்கு தீங்கு இழைக்கக்கூடிய டாஸ்மார்க் மதுகடைகளை மூட வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுல்தான்பேட்டையில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து மாட்டு வண்டியுடன் வந்து விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பிரச்சார குழு தலைவர் பூரண்டாம்பாளையம் மணி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டு சுல்தான் பேட்டையில் இருந்து செஞ்சேரி பிரிவு, செஞ்சேரி, செஞ்சேரிமலை ஆகிய 4 இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாட்டு வண்டிகளில் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். தமிழகம் முழுவதும் தேங்காய் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்யும் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பொது மக்களுக்கு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு கர்நாடகா, பீகார், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை போன்று கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு இழைக்கக்கூடிய டாஸ்மார்க் மதுகடைகளை மூட வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணையை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிய உணவு, காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களில் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடந்த 30 நாட்களாக தினமும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...