ரூபெல்லா தடுப்பூசியால் பள்ளி மாணவருக்கு மூளை காய்ச்சல் ? கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவையில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி போட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் கோகுல் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.  கடந்த மாதம் அப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி மாணவர்களுக்கு போடப்பட்ட நிலையில் மாணவன் கோகுலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகும் குணமாகாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கோகுல்-ன் பெற்றோர் கோவை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவனுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மாணவனின் உடல்நிலை அவ்வப்போது குணமாவதும் திடீரென அவன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதும் அவரது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  ரூபெல்லா தடுப்பு மருந்து 15 வயதுக்குட்பட்டோருக்கு கட்டாயம் என்ற அடிப்படையில் அரசு வழங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் இதேபோன்று குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...