ரூபெல்லா தடுப்பூசியால் பள்ளி மாணவருக்கு மூளை காய்ச்சல் ? கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவையில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி போட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் கோகுல் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.  கடந்த மாதம் அப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி மாணவர்களுக்கு போடப்பட்ட நிலையில் மாணவன் கோகுலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகும் குணமாகாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கோகுல்-ன் பெற்றோர் கோவை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவனுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மாணவனின் உடல்நிலை அவ்வப்போது குணமாவதும் திடீரென அவன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதும் அவரது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  ரூபெல்லா தடுப்பு மருந்து 15 வயதுக்குட்பட்டோருக்கு கட்டாயம் என்ற அடிப்படையில் அரசு வழங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் இதேபோன்று குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...