வேளாண் கூட்டுறவு சங்க முறைகேடுகளுக்கு கண்டனம் - விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: விவசாயிகளுக்கு உடனடியாக மறுகடன் வழங்க வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கே 752 விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள் உழவர்களுக்கு ரசீது வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும், இச்செயலை கண்டித்து ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து உடுமலைப்பேட்டையில் நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகளுக்கு மறு கடன் வழங்க கோரிய கோரிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.



உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு விவசாயிகளுக்கான மறுகடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் மூன்று விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...