கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி மோகன்குமார் ஆகியோர், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீசார் கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததால் கார்த்திக்கிற்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் மீது நேற்று நள்ளிரவில் சில சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த காயங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டதுடன், உடலின் பல்வேறு பகுதிகளிலும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்துறை காவலர்கள் உடனடியாக தலையிட்டு கார்த்திக்கை மீட்டு சிறை மருத்துவப் பிரிவிற்கு கொண்டு சென்று, பின்னர் உடல்நிலை காரணமாக நள்ளிரவு நேரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே முக்கிய குற்றவாளி மீது சிறைக்குள்ளேயே தாக்குதல் நடைபெற்றிருப்பது கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...