வேளாண் கூட்டுறவு சங்க முறைகேடுகளுக்கு கண்டனம் - விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: விவசாயிகளுக்கு உடனடியாக மறுகடன் வழங்க வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கே 752 விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள் உழவர்களுக்கு ரசீது வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும், இச்செயலை கண்டித்து ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை கண்டித்து உடுமலைப்பேட்டையில் நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகளுக்கு மறு கடன் வழங்க கோரிய கோரிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.



உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு விவசாயிகளுக்கான மறுகடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் மூன்று விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...