விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இந்தாண்டு பிரதிஷ்டை செய்யவுள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி அறிவிப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மகாலில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்,



இந்தியா வல்லரசாக ஊழலற்ற நாடாக திகழ இந்து முன்னணி தற்போது பாடுபட்டு வருவதாகவும் கடந்த காலத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் தான் உடன் இருந்ததாகவும் கூறியதற்கான முரண்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகும் என்றும் தற்போது கணக்கிட்டு பணி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை பிரச்சனை இன்றி மக்கள் அமைதியாக வாழ தீர்வு காணும் முயற்சியில் இந்து முன்னணி தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...