விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இந்தாண்டு பிரதிஷ்டை செய்யவுள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி அறிவிப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மகாலில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்,



இந்தியா வல்லரசாக ஊழலற்ற நாடாக திகழ இந்து முன்னணி தற்போது பாடுபட்டு வருவதாகவும் கடந்த காலத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் தான் உடன் இருந்ததாகவும் கூறியதற்கான முரண்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகும் என்றும் தற்போது கணக்கிட்டு பணி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை பிரச்சனை இன்றி மக்கள் அமைதியாக வாழ தீர்வு காணும் முயற்சியில் இந்து முன்னணி தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...