விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இந்தாண்டு பிரதிஷ்டை செய்யவுள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி அறிவிப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மகாலில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்,



இந்தியா வல்லரசாக ஊழலற்ற நாடாக திகழ இந்து முன்னணி தற்போது பாடுபட்டு வருவதாகவும் கடந்த காலத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் தான் உடன் இருந்ததாகவும் கூறியதற்கான முரண்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகும் என்றும் தற்போது கணக்கிட்டு பணி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை பிரச்சனை இன்றி மக்கள் அமைதியாக வாழ தீர்வு காணும் முயற்சியில் இந்து முன்னணி தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...