மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம் - 245 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்..!

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தகுதியுள்ள 245 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.


கோவை: மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 483 பேரில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய வந்தன.

இம்முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. முகாமில் மொத்தம் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதில், 245 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...