மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம் - 245 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்..!

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தகுதியுள்ள 245 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.


கோவை: மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 483 பேரில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய வந்தன.

இம்முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. முகாமில் மொத்தம் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதில், 245 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...