திருப்பூரில் இரவில் பூத்த பிரம்ம கமல பூக்கள் - பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு!

திருமுருகன்பூண்டி அடுத்த தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன் என்பவரது வீட்டில் பூத்துள்ள நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.



திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே பூத்துள்ள பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன்.



இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்ம கமல பூக்கள் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளது.



இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.



அதனை தொடர்ந்து பூக்களுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபாடு செய்தனர்.



மேலும், குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ குணம் நிறைந்த இந்த பூவை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் இந்த பூக்களை சாப்பிட்டனர்.



தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த பூக்களை வந்து பார்த்து சென்றனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...