திருப்பூரில் இரவில் பூத்த பிரம்ம கமல பூக்கள் - பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு!

திருமுருகன்பூண்டி அடுத்த தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன் என்பவரது வீட்டில் பூத்துள்ள நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.



திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே பூத்துள்ள பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன்.



இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்ம கமல பூக்கள் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளது.



இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.



அதனை தொடர்ந்து பூக்களுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபாடு செய்தனர்.



மேலும், குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ குணம் நிறைந்த இந்த பூவை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் இந்த பூக்களை சாப்பிட்டனர்.



தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த பூக்களை வந்து பார்த்து சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...