சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் கோவை லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


கோவை: தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் இருந்து இருந்து தினசரி, 170க்கும் மேற்பட்ட தனி லாரிகள் நூற்பு நூல், 20 டிரக்குகள் ஜவுளி இயந்திரங்கள், 75 லாரிகளில் இன்ஜினியரிங் உதிரிபாகங்கள், 10 லாரிகளில் வார்ப்பு பொருட்கள் என மேலும் பல பொருட்கள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இது தவிர ஏற்றுமதி சரக்கு, கோயம்புத்தூரில் இருந்து பல வகையான சரக்குகள் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் (Containers) பல துறைமுகங்களுக்கு செல்கின்றன.



தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் அவர்களை சந்தித்தார்.



அதற்கு பிறகு கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம், CODISSIA, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம், SIEMA, கோடிசியா பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின், CDIIC இயக்குநர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார்.

ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது மற்றும் செலவு, நேரம் மற்றும் வசதிக்கான நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.



போக்குவரத்து இழப்பு, காப்பீடு, பொருட்களின் பாதுகாப்பு, கையாளுதல், வேகன்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குவதில் உள்ள சவால்கள் விவாதத்தின் ஒரு பகுதியாகும். கூட்டத்தின் போது ரயில்வே அதிகாரிகளால் பல்வேறு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டது.

அனைத்து கருத்துக்களையும் பெற்ற பிறகு, ரயில்வே அதிகாரிகள் பத்து நாட்களுக்குள் சாத்தியமான தீர்வுகளை மறுபரிசீலனை செய்வார்கள் மற்றும் கோயம்புத்தூரில் சரக்கு வணிகத்தை பெற மீண்டும் குழுவை சந்திப்பார்கள்.



அவரை கோயம்புத்தூரில் உள்ள Cointec மையத்தில் CODISSIA தலைவர் & அலுவலக நிர்வாகிகள் அவரை கௌரவித்தனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...