மசினகுடி - ஊட்டி சாலையில் உள்ள வாழைத்தோட்டம் பிரிவில் 6 வயதுடைய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூராய்வு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி: மசினகுடி அருகே 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி கோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி - ஊட்டி சாலை ரோட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பிரிவில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பகுதியில் 6 வயதுடைய பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றது.
பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். இருந்தபோதிலும் அது சக விலங்கு தாக்கியதால் படு காயம் அடைந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி கோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி - ஊட்டி சாலை ரோட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பிரிவில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பகுதியில் 6 வயதுடைய பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றது.
பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். இருந்தபோதிலும் அது சக விலங்கு தாக்கியதால் படு காயம் அடைந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.