மசினகுடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை - பரபரப்பு!

மசினகுடி - ஊட்டி சாலையில் உள்ள வாழைத்தோட்டம் பிரிவில் 6 வயதுடைய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில், வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூராய்வு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி: மசினகுடி அருகே 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி கோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி - ஊட்டி சாலை ரோட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பிரிவில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பகுதியில் 6 வயதுடைய பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றது.

பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். இருந்தபோதிலும் அது சக விலங்கு தாக்கியதால் படு காயம் அடைந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...