பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாள் - உடுமலையில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை உள்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 85 ஆவது பிறந்த நாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.



இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் அக்கட்சி பிரமுகர்கள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிழவன் காட்டூர், குமரலிங்கம், எளைய முத்தூர், வாளவாடி உட்பட பத்துக்கு மேற்பட்ட இடங்களிலும் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், பாமக கொடி ஏற்றியும் மரக்கன்றுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



இதில், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் சிங்காரவேல், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ,உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு மாவட்ட ஊடக பேரவை செயலாளர் கனகராஜ், பணிக்குழு செயலாளர் மருத முத்து, மாவட்ட அன்புமணி தம்பிகள் படை தலைவர் மகாலிங்கம்,ஓன்றிய தேர்தல் பணிக்குழு செயலாளர் காளிமுத்து, ஓன்றிய அன்பு மணி தம்பிகள் படை செயலாளர் சாமிநாதன், ஓன்றிய கொள்கை விளக்க அணி செயலாளர் குமார் என்கிற சிவக்குமார், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ராமலிங்கம் அன்புமணி தம்பிகள் படை வெங்கடேஷ், கோபாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், நந்தகோபால், பாலகிருஷ்ணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...