பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாள் - உடுமலையில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை உள்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 85 ஆவது பிறந்த நாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.



இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் அக்கட்சி பிரமுகர்கள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிழவன் காட்டூர், குமரலிங்கம், எளைய முத்தூர், வாளவாடி உட்பட பத்துக்கு மேற்பட்ட இடங்களிலும் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், பாமக கொடி ஏற்றியும் மரக்கன்றுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



இதில், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் சிங்காரவேல், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ,உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு மாவட்ட ஊடக பேரவை செயலாளர் கனகராஜ், பணிக்குழு செயலாளர் மருத முத்து, மாவட்ட அன்புமணி தம்பிகள் படை தலைவர் மகாலிங்கம்,ஓன்றிய தேர்தல் பணிக்குழு செயலாளர் காளிமுத்து, ஓன்றிய அன்பு மணி தம்பிகள் படை செயலாளர் சாமிநாதன், ஓன்றிய கொள்கை விளக்க அணி செயலாளர் குமார் என்கிற சிவக்குமார், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ராமலிங்கம் அன்புமணி தம்பிகள் படை வெங்கடேஷ், கோபாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், நந்தகோபால், பாலகிருஷ்ணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...