திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான முதல்கட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூரில் மகளிர் உரிமை திட்டம் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று 225 ஊராட்சிகள் 13 ஊராட்சி ஒன்றியங்கள் 30 மாநகராட்சி வார்டுகளில் நடைபெற்றது. இந்த விண்ணப்ப பதிவு முகாமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொள்ளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அவர்களது இல்லங்களுக்கு கொண்டு சென்று விண்ணப்பங்கள் மற்றும் கலந்து கொள்ள வேண்டிய தேதி நேரம் ஆகியவை குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...