திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான முதல்கட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூரில் மகளிர் உரிமை திட்டம் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று 225 ஊராட்சிகள் 13 ஊராட்சி ஒன்றியங்கள் 30 மாநகராட்சி வார்டுகளில் நடைபெற்றது. இந்த விண்ணப்ப பதிவு முகாமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொள்ளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அவர்களது இல்லங்களுக்கு கொண்டு சென்று விண்ணப்பங்கள் மற்றும் கலந்து கொள்ள வேண்டிய தேதி நேரம் ஆகியவை குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...