தாராபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சோகம்!

தாராபுரம் அடுத்த பொம்பநல்லூரில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தமாஜி என்பவரது 3 வயது மகன், பக்கத்து வீட்டு செப்டிக் டேங்க் மீது விளையாடிக் கொண்டிருந்த போது அதன் மூடி உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே, விளையாடும் போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தமாஜி (36). இவர், தனது குடும்பத்துடன், தாராபுரம் - பழனி சாலையில், பொம்பநல்லூர் பகுதியில் உள்ள (பழனி விஜய்) தனியார் ஸ்பின்னிங் மில்லில் குடியிருப்பில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

சந்தமாஜியின் 3 வயது மகன், பக்கத்து வீட்டு சிறுவனுடன் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து, இருவரும் தொட்டிக்குள் விழுந்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள், இருவரையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



அங்கு, சிறுவர்களை பரிசோதனை மருத்துவர்கள், 3 வயது வடமாநில சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மற்றொரு சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இச்சம்பவம் குறித்து, அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...