தாராபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சோகம்!

தாராபுரம் அடுத்த பொம்பநல்லூரில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தமாஜி என்பவரது 3 வயது மகன், பக்கத்து வீட்டு செப்டிக் டேங்க் மீது விளையாடிக் கொண்டிருந்த போது அதன் மூடி உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே, விளையாடும் போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தமாஜி (36). இவர், தனது குடும்பத்துடன், தாராபுரம் - பழனி சாலையில், பொம்பநல்லூர் பகுதியில் உள்ள (பழனி விஜய்) தனியார் ஸ்பின்னிங் மில்லில் குடியிருப்பில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

சந்தமாஜியின் 3 வயது மகன், பக்கத்து வீட்டு சிறுவனுடன் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து, இருவரும் தொட்டிக்குள் விழுந்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள், இருவரையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



அங்கு, சிறுவர்களை பரிசோதனை மருத்துவர்கள், 3 வயது வடமாநில சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மற்றொரு சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இச்சம்பவம் குறித்து, அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...