மூலனூர் ஒன்றியத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் கயல்விழி!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டிலான மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, CNF நிதி, மூலனூர் பேரூராட்சி நெடுஞ்சாலை துறை, 15வது நிதிக்குழு மூலம் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பல்வேறு திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்த திட்டத்தின் மூலம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம் கிளாங்குண்டல், ராக்கியா வலசு, குமாரபாளையம், வடுகபட்டி, மஞ்சக்காம்பட்டி, சடையப்பன் புதூர், நீளாங்காளி வலசு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



இந்த பகுதிகளில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலை அமைத்தல், மேம்பாலம் அமைத்தல், குடிநீர் மேல்நிலை தொட்டி அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்விற்கு பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அரசு ஆரம்பப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ஆதிதிராவிடர் காலனியில், சுகாதார வளாகம் திறந்து வைத்தல், சிமெண்ட் சாலை திறந்து வைத்தல், உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட மக்கள் நல திட்ட கட்டிடங்கள் மற்றும் தார் சாலை, சிமெண்ட் சாலைகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, துரை தமிழரசு, மூலனூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி சுரேஷ் வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...