ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம்


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவர் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலிதாவின் மரணத்தில் மர்மம்  இருப்பதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமாதியின் அருகே செய்தியாளர்களைச் சந்தித்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சசிகலா அணியினரால் தான் தாக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அ தி மு க அணியானது சசிகலா தரப்பு மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.



இதனைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் ஓபிஎஸ் அணியினர், இன்று கோவை சிவானந்தா காலனியில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், 

முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், நடிகர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...