வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு!

வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த குடி தண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை உடலை மீட்டு அடக்கம் செய்தனர். என் பின்னர் தண்ணீர் சுத்தம் செய்த பிறகு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை அருகே குடிதண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு குடி தண்ணீர் பயன்படுத்த 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை தொழிலாளர்களுக்கு இயந்திரம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த தண்ணீர் தொட்டியானது வேலி அமைத்து பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தண்ணீர் தொட்டி வழியாக வந்த காட்டெருமை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டிக்குள் காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வன சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகத்தினரும் காட்டெருமையை உடலை பல மணி நேரம் போராடி தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் தண்ணீரை சுத்தம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...