வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு!

வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த குடி தண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை உடலை மீட்டு அடக்கம் செய்தனர். என் பின்னர் தண்ணீர் சுத்தம் செய்த பிறகு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை அருகே குடிதண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு குடி தண்ணீர் பயன்படுத்த 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை தொழிலாளர்களுக்கு இயந்திரம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த தண்ணீர் தொட்டியானது வேலி அமைத்து பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தண்ணீர் தொட்டி வழியாக வந்த காட்டெருமை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டிக்குள் காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வன சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகத்தினரும் காட்டெருமையை உடலை பல மணி நேரம் போராடி தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் தண்ணீரை சுத்தம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...