உடுமலை திருப்பதி கோவில் 5ஆம் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆஞ்சநேயர், கருடாழ்வார் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை பாலாஜி பட்டர் தலைமையில் நடைபெற்றது.



திருவள்ளூர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்துவான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் எஸ்.வி.புரம் ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 



உற்சவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், நலுங்கு பொடி, விபூதி, பழங்கள் உட்பட பதினாறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.



இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி கோவில் அறங்காவலர் குழு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...