உடுமலை திருப்பதி கோவில் 5ஆம் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆஞ்சநேயர், கருடாழ்வார் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை பாலாஜி பட்டர் தலைமையில் நடைபெற்றது.



திருவள்ளூர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்துவான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் எஸ்.வி.புரம் ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 



உற்சவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், நலுங்கு பொடி, விபூதி, பழங்கள் உட்பட பதினாறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.



இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி கோவில் அறங்காவலர் குழு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...