உடுமலை திருப்பதி கோவில் 5ஆம் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவிலில் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரேணுகா தேவி அம்மனுக்கு 150 குடங்கள் மூலம் அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆஞ்சநேயர், கருடாழ்வார் தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை பாலாஜி பட்டர் தலைமையில் நடைபெற்றது.



திருவள்ளூர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்துவான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் எஸ்.வி.புரம் ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 



உற்சவருக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், நலுங்கு பொடி, விபூதி, பழங்கள் உட்பட பதினாறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.



இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பதி கோவில் அறங்காவலர் குழு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...