கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா!

துடியலூர் அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

துடியலூரை அடுத்த கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுழற்சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டித்திறப்பு விழா நடைபெற்றது. 



இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக மரங்களின் நிழலில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

இதனை கருத்தில் கொண்டு கோவை அக்மி சுழற்சங்கம் 133, கோவை யுனைடட் சுழற்சங்கம் 186, தாரணி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.18 லட்சம் செலவில் இரு வகுப்பறைகளை புதிதாக கட்டித்தர இசைந்து கட்டிட பணிகள் நடந்து வந்தன.



பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாரதி செல்வம் தலைமை வகித்தார். 



சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி, சுழற்சங்கங்களின் தலைவர்கள் ஆர்.ஆர்.வித்யாசாகர், எஸ்.ராகுல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 



தொடர்ந்து பள்ளியில் சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



விழாவின் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...