கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா!

துடியலூர் அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

துடியலூரை அடுத்த கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுழற்சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டித்திறப்பு விழா நடைபெற்றது. 



இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக மரங்களின் நிழலில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

இதனை கருத்தில் கொண்டு கோவை அக்மி சுழற்சங்கம் 133, கோவை யுனைடட் சுழற்சங்கம் 186, தாரணி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.18 லட்சம் செலவில் இரு வகுப்பறைகளை புதிதாக கட்டித்தர இசைந்து கட்டிட பணிகள் நடந்து வந்தன.



பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாரதி செல்வம் தலைமை வகித்தார். 



சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி, சுழற்சங்கங்களின் தலைவர்கள் ஆர்.ஆர்.வித்யாசாகர், எஸ்.ராகுல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 



தொடர்ந்து பள்ளியில் சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



விழாவின் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...