கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா!

துடியலூர் அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

துடியலூரை அடுத்த கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுழற்சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டித்திறப்பு விழா நடைபெற்றது. 



இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக மரங்களின் நிழலில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 

இதனை கருத்தில் கொண்டு கோவை அக்மி சுழற்சங்கம் 133, கோவை யுனைடட் சுழற்சங்கம் 186, தாரணி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.18 லட்சம் செலவில் இரு வகுப்பறைகளை புதிதாக கட்டித்தர இசைந்து கட்டிட பணிகள் நடந்து வந்தன.



பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாரதி செல்வம் தலைமை வகித்தார். 



சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி, சுழற்சங்கங்களின் தலைவர்கள் ஆர்.ஆர்.வித்யாசாகர், எஸ்.ராகுல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 



தொடர்ந்து பள்ளியில் சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



விழாவின் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...