கோவை கூடலூரில் மக்கள் தொடர்பு முகாம் - ரூ.2.06 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன!

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கேஸ் கம்பெனி பகுதியில் மாவட்ட வருவாய் துறை சார்பாக மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கலந்துகொண்டு 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.



கோவை: கூடலூர் அருகே மாவட்ட வருவாய் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட வருவாய் துறை சார்பாக கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கேஸ் கம்பெனி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார். 

மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ், கூடலூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.ஷர்மிளா பயனாளிகளுக்கு 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 80 பயனாளிகளுக்கும், வருவாய்த் துறையால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா 79 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் இணைய வழிப்பட்ட 57 பயனாளிகளுக்கும் மகளிர் சுய உதவி குழு மானியம் 2 பயனாளிகளுக்கும் தோட்டக்கலை துறையின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை ஒரு பயனாளிக்கும் வழங்கப்பட்டன. 

மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை 4 பயனாளிகளுக்கும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ட்ரில்லர் கருவி ஒரு பயனாளிக்கும் குடும்ப அட்டை 10 பயனாளிகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் எந்திரம் 3 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன. 



முன்னதாக இந்நிகழ்ச்சியில் விவசாய கையேடும் வெளியிட்டனர். விவசாயத் துறை, மருத்துவத்துறை, மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.



மேலும் நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கோவிந்தன், தாசில்தார் தங்கராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...