கோவை கூடலூரில் மக்கள் தொடர்பு முகாம் - ரூ.2.06 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன!

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கேஸ் கம்பெனி பகுதியில் மாவட்ட வருவாய் துறை சார்பாக மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கலந்துகொண்டு 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.



கோவை: கூடலூர் அருகே மாவட்ட வருவாய் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட வருவாய் துறை சார்பாக கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கேஸ் கம்பெனி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார். 

மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வபிரகாஷ், கூடலூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.ஷர்மிளா பயனாளிகளுக்கு 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 80 பயனாளிகளுக்கும், வருவாய்த் துறையால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா 79 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் இணைய வழிப்பட்ட 57 பயனாளிகளுக்கும் மகளிர் சுய உதவி குழு மானியம் 2 பயனாளிகளுக்கும் தோட்டக்கலை துறையின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை ஒரு பயனாளிக்கும் வழங்கப்பட்டன. 

மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை 4 பயனாளிகளுக்கும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ட்ரில்லர் கருவி ஒரு பயனாளிக்கும் குடும்ப அட்டை 10 பயனாளிகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் எந்திரம் 3 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன. 



முன்னதாக இந்நிகழ்ச்சியில் விவசாய கையேடும் வெளியிட்டனர். விவசாயத் துறை, மருத்துவத்துறை, மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.



மேலும் நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கோவிந்தன், தாசில்தார் தங்கராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...