கோவை கிழக்கு மண்டலத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பிட்டில் நடைபெற்று வரும் தார் சாலை பணி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.
கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.6க்குட்பட்ட வீரியம்பாளையம் முதல் அன்னை பிள்ளையார் கோவில் வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் 1.300 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகள் மற்றும்

கருப்பராயம் பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகளையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நேரு நகா் மாநகராட்சி பள்ளியில் பழுதடைந்த கழிவறைகளை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, வீரியம்பாளையம் பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியில் தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க உரிய திட்ட மதிப்பிடு தயாரிக்க பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.