கோவை கிழக்கு மண்டலத்தில் தார்ச் சாலை, பள்ளி கட்டிட புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு!

கோ‌வை கிழக்கு மண்டலத்தில்‌ தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பிட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.



கோவை: கோவை கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி புனரமைப்பு பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.6க்குட்பட்ட வீரியம்பாளையம்‌ முதல்‌ அன்னை பிள்ளையார்‌ கோவில்‌ வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்‌ ரூ.88 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.300 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.20 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌



கருப்பராயம் பாளையம்‌ மாநகராட்சி நடுநிலை பள்ளியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பள்ளி வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் நேரு நகா்‌ மாநகராட்சி பள்ளியில்‌ பழுதடைந்த கழிவறைகளை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌, கட்டுமான‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வீரியம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கல்பனா, அப்பகுதியில்‌ தார்‌ சாலை மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பிடு தயாரிக்க பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...