பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள் - விவசாயிகள் எதிர்ப்பு!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் சாகுபடி நிலத்தை மீட்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை சேர்ந்த 11 விவசாயிகள், சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இதற்கான குறிப்பிட்ட குத்தகை தொகையை செலுத்தி வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 18 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்கும் முயற்சியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் சார்பில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இதற்கு கோவில் நிர்வாகம் பதிலளித்துள்ள நிலையில், இன்று இந்து அறநிலையத்துறை, மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பை மீட்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.



அப்போது நிலத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே டிராக்டரை நிறுத்திய விவசாயிகள் அதிகாரிகள் உள்ளே செல்லாதவாறு தடுத்தி நிறுத்தினர். 

அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை மீண்டும் 7 ஆம் தேதி வர உள்ள நிலையில், அவசரகதியில் விவசாய நிலத்தை அதிகாரிகள் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து வாக்குவாதம் நீடித்து வந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில், விவசாயிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், போலீசாரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, பல காலமாக குத்தகை பணம் செலுத்தி விவசாயம் செய்து வரும் நிலையில் அதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர்களிடமும் முறையிட உள்ளதாகவும், விவசாயிகளுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...