பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை மீட்க வந்த அதிகாரிகள் - விவசாயிகள் எதிர்ப்பு!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் சாகுபடி நிலத்தை மீட்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை சேர்ந்த 11 விவசாயிகள், சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இதற்கான குறிப்பிட்ட குத்தகை தொகையை செலுத்தி வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 18 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்கும் முயற்சியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் சார்பில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இதற்கு கோவில் நிர்வாகம் பதிலளித்துள்ள நிலையில், இன்று இந்து அறநிலையத்துறை, மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பை மீட்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.



அப்போது நிலத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே டிராக்டரை நிறுத்திய விவசாயிகள் அதிகாரிகள் உள்ளே செல்லாதவாறு தடுத்தி நிறுத்தினர். 

அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை மீண்டும் 7 ஆம் தேதி வர உள்ள நிலையில், அவசரகதியில் விவசாய நிலத்தை அதிகாரிகள் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து வாக்குவாதம் நீடித்து வந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில், விவசாயிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், போலீசாரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, பல காலமாக குத்தகை பணம் செலுத்தி விவசாயம் செய்து வரும் நிலையில் அதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர்களிடமும் முறையிட உள்ளதாகவும், விவசாயிகளுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...