மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.2.39 கோடி முடக்கம் - கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்கி, ரூ.23.82 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார். மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.39 கோடியை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2.39 கோடியை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அவருக்கு சமூக வலைதளமான டெலிகிராம் செயலியில் இருந்து ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்த போது இணையத்தில் சிறிய வேலைகளை செய்தால் அதற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர். 

அதனை நம்பி சிறிய அளவில் முதலீடு செய்த அவருக்கு பணமும் வந்தது. இதையடுத்து நாங்கள் சொல்வது போல் நிறைய பணம் முதலீடு செய்தால் இன்னும் பல மடங்கு லாபம் கொட்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய ராஜா ரூ.23.82 லட்சத்தை டெலிகிராம் செயலின் மூலம் முதலீடு செய்தார். 

ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை, இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி பேர்வழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். 

அந்த வங்கி கணக்குகளில் பலரிடமிருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.2.39 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே முடக்கி வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு உரிய பணத்தை பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பொதுமக்கள் மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...