சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்கு கோவை வந்த ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது சிறுவன் மாயம்…!

கோவை சிங்காநல்லூர் சிக்னலில் நேற்று காலை முதல் யுவன் என்ற 13 வயது சிறுவனை காணவில்லை - யாரேனும் கண்டால் தொடர்பு கொள்ளவும். மகாலட்சுமி: +91-89397-88969, தரணி: +91-97893-05270.

கோவை: சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (42), இவரது மகன் யுவன் கதிரவன் (13), ஆர்ட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் மகாலட்சுமி தனது மகன் யுவன் கதிரவனுடன் கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்க்காக வந்தனர்.

மேலும் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லேயவுட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் யுவன் கதிரவன் திடீரென மாயமானார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்ல.

இதையடுத்து மகாலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்ட்டிசம் பாதிப்புடன் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

சிறுவனின் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாட்சப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...