சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்கு கோவை வந்த ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது சிறுவன் மாயம்…!

கோவை சிங்காநல்லூர் சிக்னலில் நேற்று காலை முதல் யுவன் என்ற 13 வயது சிறுவனை காணவில்லை - யாரேனும் கண்டால் தொடர்பு கொள்ளவும். மகாலட்சுமி: +91-89397-88969, தரணி: +91-97893-05270.

கோவை: சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (42), இவரது மகன் யுவன் கதிரவன் (13), ஆர்ட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் மகாலட்சுமி தனது மகன் யுவன் கதிரவனுடன் கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்க்காக வந்தனர்.

மேலும் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லேயவுட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் யுவன் கதிரவன் திடீரென மாயமானார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்ல.

இதையடுத்து மகாலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்ட்டிசம் பாதிப்புடன் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

சிறுவனின் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாட்சப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...