சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்கு கோவை வந்த ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது சிறுவன் மாயம்…!

கோவை சிங்காநல்லூர் சிக்னலில் நேற்று காலை முதல் யுவன் என்ற 13 வயது சிறுவனை காணவில்லை - யாரேனும் கண்டால் தொடர்பு கொள்ளவும். மகாலட்சுமி: +91-89397-88969, தரணி: +91-97893-05270.

கோவை: சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (42), இவரது மகன் யுவன் கதிரவன் (13), ஆர்ட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் மகாலட்சுமி தனது மகன் யுவன் கதிரவனுடன் கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்க்காக வந்தனர்.

மேலும் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லேயவுட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் யுவன் கதிரவன் திடீரென மாயமானார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்ல.

இதையடுத்து மகாலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்ட்டிசம் பாதிப்புடன் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

சிறுவனின் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாட்சப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...