திருப்பூரில் கனிமவள இயக்குநர் பணியிலிருந்து விடுவிப்பு - இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்

திருப்பூரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் கனிம வள இயக்குனர் பணியிலிருந்து வள்ளலை விடுவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் கனிம வள உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த வள்ளல் என்பவர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாத உதவி இயக்குனர் வள்ளலை பணியில் இருந்து விடுவித்து கூடுதல் பொறுப்பாக சச்சின் ஆனந்த் என்பவரை நியமனம் செய்தார்.



இதனை வரவேற்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...