திருப்பூரில் கனிமவள இயக்குநர் பணியிலிருந்து விடுவிப்பு - இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாயிகள்

திருப்பூரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் கனிம வள இயக்குனர் பணியிலிருந்து வள்ளலை விடுவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் கனிம வள உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த வள்ளல் என்பவர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில், அதனை அமல்படுத்தாத உதவி இயக்குனர் வள்ளலை பணியில் இருந்து விடுவித்து கூடுதல் பொறுப்பாக சச்சின் ஆனந்த் என்பவரை நியமனம் செய்தார்.



இதனை வரவேற்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...