கோவையில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி!

கோவை சௌரிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி உமா (72). இவர் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்த போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: செளரிபாளையத்தில் பூஜை அறையில் விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை சௌரிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் இவரது மனைவி உமா (72). இவர் தனது மகன் பாலச்சந்தர் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உமா நேற்று வழக்கம்போல் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக உமாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடல் முழுவதும் பரவிய நிலையில் அங்கிருந்தவர்கள், தீயை அணைத்து உடனடியாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...