கோவையில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி!

கோவை சௌரிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி உமா (72). இவர் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்த போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: செளரிபாளையத்தில் பூஜை அறையில் விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

கோவை சௌரிபாளையம் ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் இவரது மனைவி உமா (72). இவர் தனது மகன் பாலச்சந்தர் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உமா நேற்று வழக்கம்போல் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக உமாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடல் முழுவதும் பரவிய நிலையில் அங்கிருந்தவர்கள், தீயை அணைத்து உடனடியாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...