கோவையில் தனியார் நிறுவன இயக்குநர் வீட்டில் தங்க கட்டி திருட்டு - பெண் கைது!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மயில் மார்க் சம்பா ரவை நிறுவன இயக்குனர் பொன் முருகன்(46) என்பவரது வீட்டில் இருந்த 150 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை திருடிச் சென்ற பணிப்பெண் ஜோதி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவையில் தங்க கட்டிகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அடுத்த சிரியன் சர்ச் சாலை பகுதியை சேர்ந்தவர் பொன் முருகன் (46).

இவர் பிரபல மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். இவரது வீட்டில் வைத்திருந்த சுமார் 150 கிராம் தங்க பிஸ்கட், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளது.

இதையடுத்து பொன்முருகன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

அப்போது அவரது வீட்டு வேலைக்கு இருந்த ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி (47) என்பவர் தங்கக் கட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பொன்முருகன் ஆர்.எஸ் புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜோதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...