கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார், உண்டியலில் பணம், நகை எவ்வளவு இருந்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருந்ததை கண்ட கோவில் காவலாளி அதிர்ச்சியடைந்து உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.



மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கோவில் தேர் திருவிழா பல ஆயிரம் பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த நிலையில் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...