கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார், உண்டியலில் பணம், நகை எவ்வளவு இருந்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருந்ததை கண்ட கோவில் காவலாளி அதிர்ச்சியடைந்து உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.



மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கோவில் தேர் திருவிழா பல ஆயிரம் பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த நிலையில் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...