கோவை அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி - போலீஸ் விசாரணை!

கோவை இக்கரை போளூவாம்பட்டியில் உள்ள விவசாய தோட்ட கிணற்றில் சின்னதுரை என்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரை போளூவாம்பட்டி, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது60).

இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மகன் சக்திவேல் தனியார் வங்கி மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னதுரை தனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுந்தரசாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

பின்னர் சுந்தரசாமி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், நீண்ட நேரமாக சின்னதுரை அவரது வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சுந்தரசாமியின் தோட்டத்தில் இருந்த சகுந்தலா என்பவர் கிணற்றில் பார்த்தபோது, சின்னசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்த, அவர் உடனடியாக ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சின்னதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சின்னதுரையின் மகன் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...