கோவை அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி - போலீஸ் விசாரணை!

கோவை இக்கரை போளூவாம்பட்டியில் உள்ள விவசாய தோட்ட கிணற்றில் சின்னதுரை என்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரை போளூவாம்பட்டி, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது60).

இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மகன் சக்திவேல் தனியார் வங்கி மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னதுரை தனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுந்தரசாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

பின்னர் சுந்தரசாமி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், நீண்ட நேரமாக சின்னதுரை அவரது வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சுந்தரசாமியின் தோட்டத்தில் இருந்த சகுந்தலா என்பவர் கிணற்றில் பார்த்தபோது, சின்னசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்த, அவர் உடனடியாக ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சின்னதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சின்னதுரையின் மகன் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...