கோவை அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி - போலீஸ் விசாரணை!

கோவை இக்கரை போளூவாம்பட்டியில் உள்ள விவசாய தோட்ட கிணற்றில் சின்னதுரை என்ற விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த இக்கரை போளூவாம்பட்டி, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது60).

இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மகன் சக்திவேல் தனியார் வங்கி மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னதுரை தனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுந்தரசாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

பின்னர் சுந்தரசாமி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், நீண்ட நேரமாக சின்னதுரை அவரது வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சுந்தரசாமியின் தோட்டத்தில் இருந்த சகுந்தலா என்பவர் கிணற்றில் பார்த்தபோது, சின்னசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்த, அவர் உடனடியாக ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சின்னதுரையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சின்னதுரையின் மகன் சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...