பல்லடம் அருகே கனிம வளங்கள் கொள்ளை - லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் அதிகளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக தொடர்ந்து கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கம்பாளையம், ராசா கவுண்டம்பாளையம்,காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.



இந்த கல்குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு சாலை அமைக்கும் பணிக்காக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கனரக வாகனங்கள் மூலம் எம்சான்ட், ஜல்லி போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.



50 டன் அளவில் அதிக அளவில் எம் சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கிராம சாலைகள் வழியாக செல்வதால் ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாகவும்,

அதிகப்படியான கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபை கூட்டத்திலும் கனிம வள கொல்லையில் ஈடுபடும் கேரள வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி கேரள வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டதை கண்டித்து சுக்கம்பாளையம் வழியாக வந்த கேரளா வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...