பல்லடம் அருகே கனிம வளங்கள் கொள்ளை - லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் அதிகளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக தொடர்ந்து கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கம்பாளையம், ராசா கவுண்டம்பாளையம்,காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.



இந்த கல்குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு சாலை அமைக்கும் பணிக்காக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கனரக வாகனங்கள் மூலம் எம்சான்ட், ஜல்லி போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.



50 டன் அளவில் அதிக அளவில் எம் சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கிராம சாலைகள் வழியாக செல்வதால் ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாகவும்,

அதிகப்படியான கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபை கூட்டத்திலும் கனிம வள கொல்லையில் ஈடுபடும் கேரள வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி கேரள வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டதை கண்டித்து சுக்கம்பாளையம் வழியாக வந்த கேரளா வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...