பல்லடம் அருகே கனிம வளங்கள் கொள்ளை - லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் அதிகளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதாக தொடர்ந்து கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கம்பாளையம், ராசா கவுண்டம்பாளையம்,காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.



இந்த கல்குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு சாலை அமைக்கும் பணிக்காக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கனரக வாகனங்கள் மூலம் எம்சான்ட், ஜல்லி போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.



50 டன் அளவில் அதிக அளவில் எம் சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு கிராம சாலைகள் வழியாக செல்வதால் ஊர் மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாகவும்,

அதிகப்படியான கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம சபை கூட்டத்திலும் கனிம வள கொல்லையில் ஈடுபடும் கேரள வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி கேரள வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டதை கண்டித்து சுக்கம்பாளையம் வழியாக வந்த கேரளா வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...