கோவை மதுக்கரை ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே உள்ள மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: மதுக்கரை அடுத்த மோகன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் ஆனது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கோவை குனியமுத்தூர் மயில்கல் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய வினித்தை வீட்டிலிருந்தவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வினித் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...