கோவை மதுக்கரை ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே உள்ள மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: மதுக்கரை அடுத்த மோகன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் ஆனது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கோவை குனியமுத்தூர் மயில்கல் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய வினித்தை வீட்டிலிருந்தவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வினித் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...